எந்த ஒரு உச்ச நிலையானாலும் அது தன்னை உயர்த்தி நிறுத்தக் கூடிய உயர்நிலை வாழ்வில் எப்போதோ ஏதோ ஒரு கணத்தில் நிகழக்கூடிய ஒன்றே. ஆனால் அதையே நீட்டி முழக்கி காலவோட்டத்தில் பாய்ச்சிட்டால் அவனே கவிஞனாகிறான். அத்தகைய மேலோங்கிய கவிஞனின் உயர்நிலையின் தத்தளிப்பிலிருந்து எழுந்ததுதான் அண்டங்காளி. எந்த ஒரு கவிஞனுக்கும் அவன் தனக்கே உருவாக்கும் கவியுலகம் உண்டு. ஆனால் எந்த ஒரு கவியுலகமும் பெருங்கவியுலக திரட்டின் சுழல்வீச்சில் பாய்ந்திடும் தீப்பற்றிய பொறித்துண்டுதான். அந்த தீயின் உக்கிரமும் உஷ்ணமுமே ஒரு கவிஞனின் தன்னடையாளம். அதை இயல்பென கக்கியிருக்கிறது அண்டங்காளி. சடசடவென ஓடி மெய் அயர மூச்சிறைத்து விருட்டென நின்று பெருந்தாக பசிக்கு அபிஷேகமாய் பொழியும் பெருங்களியமுதமாய் பொழிகிறாள் காளி. பிரபஞ்சம் முழுவதும் அதன் முக்காலம் எங்கும் ஒரு நிலையாய் நிலைப்பெற்ற ஒருத்தியை கவிஞன் தன்னிலையின் நிகழ் தருணத்திற்கு அழைத்து ஒரு பின்னலாய் பின்னி மண்டியிட்டு சரணடைவதும் அதன் மூலமாக அவள் ஜோதியில் கலப்பதும் சில சமயம் அவளிடம் பெற்ற ஜோதியின் துணைக்கொண்டே அவளுடன் சரிசமமாக நிற்பதுமென ஆசை ஒரு கவி தருணத்தை அளிக்கிறார். ...
I'm what you see me as