Skip to main content

ஆசை கவிதைகள்

எந்த ஒரு உச்ச நிலையானாலும் அது தன்னை உயர்த்தி நிறுத்தக் கூடிய உயர்நிலை வாழ்வில் எப்போதோ ஏதோ ஒரு கணத்தில் நிகழக்கூடிய ஒன்றே. ஆனால் அதையே நீட்டி முழக்கி காலவோட்டத்தில் பாய்ச்சிட்டால் அவனே கவிஞனாகிறான். அத்தகைய மேலோங்கிய கவிஞனின் உயர்நிலையின் தத்தளிப்பிலிருந்து எழுந்ததுதான் அண்டங்காளி. எந்த ஒரு கவிஞனுக்கும் அவன் தனக்கே உருவாக்கும் கவியுலகம் உண்டு. ஆனால் எந்த ஒரு கவியுலகமும் பெருங்கவியுலக திரட்டின் சுழல்வீச்சில் பாய்ந்திடும் தீப்பற்றிய பொறித்துண்டுதான். அந்த தீயின் உக்கிரமும் உஷ்ணமுமே ஒரு கவிஞனின் தன்னடையாளம். அதை இயல்பென கக்கியிருக்கிறது அண்டங்காளி. சடசடவென ஓடி மெய் அயர மூச்சிறைத்து விருட்டென நின்று பெருந்தாக பசிக்கு அபிஷேகமாய் பொழியும் பெருங்களியமுதமாய் பொழிகிறாள் காளி. பிரபஞ்சம் முழுவதும் அதன் முக்காலம் எங்கும் ஒரு நிலையாய் நிலைப்பெற்ற ஒருத்தியை கவிஞன் தன்னிலையின் நிகழ் தருணத்திற்கு அழைத்து ஒரு பின்னலாய் பின்னி மண்டியிட்டு சரணடைவதும் அதன் மூலமாக அவள் ஜோதியில் கலப்பதும் சில சமய‌ம் அவளிடம் பெற்ற ஜோதியின் துணைக்கொண்டே அவளுடன் சரிசமமாக நிற்பதுமென ஆசை ஒரு கவி தருணத்தை அளிக்கிறார். 

ஒரு பக்கத்தில் இப்படியிருக்க கொண்டலாத்தியில் தன்னை இலகுவாக்கி சிட்டுக்குருவிகளை நேசிக்க செல்கிறார். நம்முடன் என்றும் இருக்கும் உயிராகவும் மனிதனின் கலை படிமமாகவும் என்றும் பயணிக்கும் பறவைகளிடம் தஞ்சம் புகுகிறார். கையிலேந்தி தொட்டு அரவணைத்து உதட்டு முத்தம் கோரும் பறவைளிலிருந்து தன்னையே கடந்த பிரபஞ்ச சுதந்திர பேருவாக உருவகப்படுத்தும் பறவை வரை ஆசை கவிதைகளில் பறவைகள் தன் மிளிர்வுடன் இருக்கிறன. ஒரு பயணியின் தற்கணத்தின் இளநகை வியப்பு இதிலுண்டு. அடுத்து இந்த குவாண்டம் செல்ஃபி. ஒரு அறிவியல் கவிதையாகும் போது அதில் எந்திரத்தன்மையின் வாடை விடைப்பெற்றிருக்க வேண்டும் அதற்கு விடைக்கொடுத்து ஒரு தனலின் தகிப்புணர்வுகளாக மிதவெப்பநிலையில் கவிஞனின் கவிநிலை பாயப்பட்டிருப்பதுதான் குவாண்டம் செல்ஃபி. திடுதிப்பென்று கவிதையின் நுழைவுப் புள்ளியை தொட்டு கை தடுமாறி வெற்று காமத்தில் விழ நினைப்பனை கவிதை தன் காம உலகத்தை வைத்து தூக்கி ஒத்தடம் கொடுப்பதுப்போல் கொடுத்து உணர்வூட்ட பெருக்கை ஊட்டி ஆனந்த களிப்பாட்டுகிறது. லயித்து லயித்து ருசித்துணரும் அளவுக்கு கவிச்சுவை இப்புத்தங்களில் உண்டு. ஆசையின் கவி தரிசனம் பாரதி துவக்கிய தரிசனப்பாதையில் பயணிப்பதுப்போல் இருக்கிறது. அது என்போன்ற பாரதி அன்பர்களுக்கு கூடுதல் இன்பமே.

 

Comments

Popular posts from this blog

நிசப்தம்

இந்த வாழ்வின் ஒட்டுமொத்த தேடலும் ஒரு நிரந்தர மௌனத்திற்கான தேடலா என்ன? இங்கே நிரந்தர அல்லது எல்லையற்ற மௌனம் என்பது மரணத்தை குறிப்பதல்ல. அனைத்திற்கும் மேலான பேருரு ஞானம். இங்கே "உரு" என குறிப்பிடும்போது அந்த "வஸ்து" என ஒன்று உள்ளது என்று இருப்புணர்த்தல் பெற்றுவிடுகிறது. ஆனால் தன்னிலையிலிருந்து ஒரு அனுபவம் நிகழாமல் அத்தனை எளிதாய் அந்த 'உரு' என்னவென்பதை புரிந்துக்கொள்ளவோ அல்லது உணர்ந்துக்கொள்ளவோ முடியாது. ஆதலாலேயே அவ்வனுபவத்தை இருப்புணர்த்தி 'உரு' என அழைக்கபடுகிறதேயன்றி அவ்வுணர்வு என்பது மெய்மறந்த கால எல்லையில் மௌனத்துடன் மௌனமாக பகுப்பொன்றே இல்லாத நித்தியத்துடன் கலத்தல் என்றே நினைக்கிறேன்.  பேச்சு, விவாதம், உரை, எழுத்து என எல்லாவற்றின் அந்தம் என்ன? அனுபவத்திலும் பேரனுபவம் என்ன? எல்லா செயலின் விழைவும் நித்தியத்தின் ரசவுணர்தல் என்றாவின், நித்தியம் என்பதே ஒரு வார்த்தைகளற்ற வெளி, மௌனமே புகமுடியாத நிசப்தம், சுழி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் பொருத்திக்கொள்ள முடியாத சுழியாவின் எதற்கென்று இவ்வாழ்வு.  ஒருவேலை வாழ்வின் சாரமே எல்லையற்ற நிசப்தம்தானோ. 

அறிமுகம் - ஜெயமோகனுக்கான கடிதம்

வணக்கம். நான் சுரேன் சாத்ராக். ஜெ ( Suren Shathrak J). சென்னையில் பிறந்தேன். UKG வரை அங்கேதான் படித்தேன். பொருளாதார சிக்கல் காரணமாக திருவண்ணாமலைக்கு வந்தோம். இதுவரை நான் கழித்த பெரும்பாலான நாட்கள் இங்கு கழித்தவையே. இன்று அங்கேதான் வசிக்கிறேன். இது ஒருபுறமிருக்கட்டும். இப்போது இதை நான் எழுதுவதற்கு முக்கியமான காரணம் ஜெயமோகனுக்கு நான் 04/02/2024 அன்று ஒரு கடிதம் எழுதியனுப்பியிருந்தேன். அதற்கு அவர் மறுமொழி செய்தால் அதையே இந்த தளத்தின் முதல் பதிவாக வெளியிட எண்ணியிருந்தேன். ஆனால் அவருக்கு வேலைப்பளு அதிகமிருக்கலாம். அல்லது அவருக்கு இது சென்று சேராமலிருந்திருக்கலாம். ஆனால் துவங்கி ஒரு மாதமாக இந்த தளம் அமைதியாகவே கிடக்கிறது. அதனால் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்தையே முதல் பதிவாக பதிவிடுகிறேன். இதிலேயே என்னைக்குறித்தான சிறு அறிமுகமும் உள்ளது. ஜெயமோகன் எப்போது மறுமொழி செய்தாலும் இதிலேயே மீண்டும் திருத்தி பதிவிடப்படும். மறுக்கடிதம் வராமல் இருக்கவும் வாய்ப்புண்டு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  ஜெயமோனுக்கான கடிதம்    நான் உங்கள் தளத்தை கடந்த மூன்று வருடமாக படித்து வருகிறேன். பல ச...

இனிய சந்திப்பு

பொதுவாக எனக்கு கைப்பேசி தட்டச்சில் நிறைய எழுத்துப் பிழைகள் வரும். மீ்ண்டும் படித்துப்பார்த்தாலும் பிழைகள் கண்களுக்கு படாது. பிழைகளுடனே ஜெயமோகனுக்கு கடிதம் எழுதியிருந்தேன். மீண்டும் சரி செய்தும் அனுப்பினேன். அவர் கண்ணில் பிழையானது பட்டுவிட்டது. பரவாயில்லை. கடிதத்தின் மறுமொழிக்காக காத்திருந்த எனக்கு அதிர்ச்சி. எப்போதும் ஐயாவின் பதிவுகள் பன்னிரண்டு மணி முடிந்தவுடன் டான் என்று வந்துவிடும். தினமும் படித்துவிடுவேன். இன்று 10/03/2024 என் கடிதத்திற்கான மறுமொழி வந்தது. திருவண்ணாமலை புத்தகத் திருவிழாவில் பவா மற்றும் எஸ்.கே.பி கருணா அவர்களின் உரையை கேட்டு முடித்துவிட்டு அண்ணாசாலையில் நடைபெற்ற கலை இலக்கிய இரவு நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு தேநீர் அருந்த பேருந்து நிலையத்திற்கு சென்றோம். தேநீரை ஒரு கையில் பிடித்துக்கொண்டு தரையிலிருந்து ஒரு கையளவே மேலேறியிருந்த திட்டில் அமர்ந்து ஜெ தளத்திலிருந்து வந்த மணிச் சத்தத்தை கேட்டு உள்ளே சென்ற எனக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி இது. அது அவரின் மறுக்கடிதம். தொடர்ந்து அவருடன் உரையாட நினைப்பதால் என்னை அறிமுகப்படுத்திக்கொண்ட கடிதம். ஆச்சரியம் என்னவென்றால் இன்றுதான் ...