Skip to main content

Posts

சூன்யமா? பிரம்மமா?

வாழ்வொரு சூன்யமென்று ஏற்றுக்கொள்வதில் பெரும் மன இறுக்கம் உண்டாகுமென்று ஐயப்பட வேண்டியதில்லை. உண்மையில் இதன் தலைக்கீழ் மனநிலையே நாம் அடைகிறோம். இத்தனை இத்தனையாக திரண்டிருக்கும் மனித உச்சங்கள் அதன் அதன் காரணக்காரிய உறவுகளிலிருந்து பிரித்துப்பார்க்கும்போது அதற்கே உரித்தான உறைந்திருக்கும் உள்ளார்ந்த ஒன்று என எதுவுமில்லை. அப்படியே ஒன்றை நாம் கண்டைந்ததாக கொண்டாலும் அது தன்னளவில் திரண்டதாக, காரணக்காரியம் அற்றதாக கொள்ளமுடியாது. அப்படி ஒரு தேடல் நம்மை சூன்யத்திற்கே இட்டுச்செல்கிறது. சூன்யத்திற்கு செல்வதென்பது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு செல்வது போன்றதல்ல. அப்படியோரு விழைவே சூன்யமானது. சூன்யமே பூகமுடியாத சூன்யம்(பிரக்ஞை மூலமாக தொடமுடியாத). மனித விழைவு எல்லைக்குட்பட்டது. பிரபஞ்சம் எல்லையானதானால் ஒட்டுமொத்த மானுடத்தேடல் தின்றுத்திர்க்க தர்கத்திற்காகவேணும் ஒரு காலவரையரையை வைக்கலாம். இறுதியில் சூன்யமே எஞ்சும். பிரபஞ்சம் எல்லையற்றதானால் மானுடமும் எல்லையற்று தன்னை இறுத்திக்கொள்ள வேண்டும். அப்படி ஒரு விவாதம் இப்போதிக்கு சாத்தியமில்லை.  அனைத்திலும் அறியமுடியாத சூன்யமும், அறிந்தாலும் எஞ்சக்கூடிய சூன்...
Recent posts

Everything is Empty

Deep down, it’s just nothing. Acknowledge you don’t have the dare to live with the realization of Emptiness. The only common thing that represents everything is — everything is inherently empty. Emptiness shows itself as absolute, but assuming the empty as absolute is itself empty. Emptiness is everywhere. Thus, everything is nothing but sameness. This sameness of Emptiness is in flux, creating its own fleeting dynamic and pattern. It’s sensed as an idea or Brahman, though not absolute. It acts as both absolute and relative, but inherently not. And thus, everything came as the way we see.

நிசப்தம்

இந்த வாழ்வின் ஒட்டுமொத்த தேடலும் ஒரு நிரந்தர மௌனத்திற்கான தேடலா என்ன? இங்கே நிரந்தர அல்லது எல்லையற்ற மௌனம் என்பது மரணத்தை குறிப்பதல்ல. அனைத்திற்கும் மேலான பேருரு ஞானம். இங்கே "உரு" என குறிப்பிடும்போது அந்த "வஸ்து" என ஒன்று உள்ளது என்று இருப்புணர்த்தல் பெற்றுவிடுகிறது. ஆனால் தன்னிலையிலிருந்து ஒரு அனுபவம் நிகழாமல் அத்தனை எளிதாய் அந்த 'உரு' என்னவென்பதை புரிந்துக்கொள்ளவோ அல்லது உணர்ந்துக்கொள்ளவோ முடியாது. ஆதலாலேயே அவ்வனுபவத்தை இருப்புணர்த்தி 'உரு' என அழைக்கபடுகிறதேயன்றி அவ்வுணர்வு என்பது மெய்மறந்த கால எல்லையில் மௌனத்துடன் மௌனமாக பகுப்பொன்றே இல்லாத நித்தியத்துடன் கலத்தல் என்றே நினைக்கிறேன்.  பேச்சு, விவாதம், உரை, எழுத்து என எல்லாவற்றின் அந்தம் என்ன? அனுபவத்திலும் பேரனுபவம் என்ன? எல்லா செயலின் விழைவும் நித்தியத்தின் ரசவுணர்தல் என்றாவின், நித்தியம் என்பதே ஒரு வார்த்தைகளற்ற வெளி, மௌனமே புகமுடியாத நிசப்தம், சுழி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் பொருத்திக்கொள்ள முடியாத சுழியாவின் எதற்கென்று இவ்வாழ்வு.  ஒருவேலை வாழ்வின் சாரமே எல்லையற்ற நிசப்தம்தானோ. 

ஆசை கவிதைகள்

எந்த ஒரு உச்ச நிலையானாலும் அது தன்னை உயர்த்தி நிறுத்தக் கூடிய உயர்நிலை வாழ்வில் எப்போதோ ஏதோ ஒரு கணத்தில் நிகழக்கூடிய ஒன்றே. ஆனால் அதையே நீட்டி முழக்கி காலவோட்டத்தில் பாய்ச்சிட்டால் அவனே கவிஞனாகிறான். அத்தகைய மேலோங்கிய கவிஞனின் உயர்நிலையின் தத்தளிப்பிலிருந்து எழுந்ததுதான் அண்டங்காளி. எந்த ஒரு கவிஞனுக்கும் அவன் தனக்கே உருவாக்கும் கவியுலகம் உண்டு. ஆனால் எந்த ஒரு கவியுலகமும் பெருங்கவியுலக திரட்டின் சுழல்வீச்சில் பாய்ந்திடும் தீப்பற்றிய பொறித்துண்டுதான். அந்த தீயின் உக்கிரமும் உஷ்ணமுமே ஒரு கவிஞனின் தன்னடையாளம். அதை இயல்பென கக்கியிருக்கிறது அண்டங்காளி. சடசடவென ஓடி மெய் அயர மூச்சிறைத்து விருட்டென நின்று பெருந்தாக பசிக்கு அபிஷேகமாய் பொழியும் பெருங்களியமுதமாய் பொழிகிறாள் காளி. பிரபஞ்சம் முழுவதும் அதன் முக்காலம் எங்கும் ஒரு நிலையாய் நிலைப்பெற்ற ஒருத்தியை கவிஞன் தன்னிலையின் நிகழ் தருணத்திற்கு அழைத்து ஒரு பின்னலாய் பின்னி மண்டியிட்டு சரணடைவதும் அதன் மூலமாக அவள் ஜோதியில் கலப்பதும் சில சமய‌ம் அவளிடம் பெற்ற ஜோதியின் துணைக்கொண்டே அவளுடன் சரிசமமாக நிற்பதுமென ஆசை ஒரு கவி தருணத்தை அளிக்கிறார்.  ...

யின் மற்றும் யாங்

இவ்வருடம் துவங்கியதிலிருந்து மார்ச்சின் மத்தியில்தான் வாசிப்பு கொஞ்சம் முடுக்கம் பெற்றிருக்கிறது. இவ்வருடம் துவங்கிய நாளிலிருந்தே இவ்வருடத்தை நான் இதுவரை வாசித்த அனைத்தையும் ஒரு மீள் வாசிப்புக்கு உட்படுத்த எண்ணியிருந்த ஆண்டுதான். இதை நான் நேர வீணென்று கருதவில்லை. அதிக ஆவலோடும் தீவிரத்தோடும் வாசிப்பவன்தான் நான். ஆனால் அதை அப்படியே விழுங்கி எடுத்துக்கொண்டு சொல்கிறேனே அல்லாமல் குறிப்பு ஒன்றும் எடுத்துக்கொண்டதில்லை. ஒரு பயணியை போலவே வாசிப்பனுபவத்தை பெற்றிருக்கிறேன். இவ்வருடம் நான் இதுவரை படித்தவைகளைக் குறித்தான சில சித்திரத்தை உருவாக்கி கொள்கிற ஆண்டாக வைத்துக்கொள்ளலாமென்றே இருக்கிறேன். புதியதாக வரும் சிலவற்றைத் தாண்டி தன்முனைப்பில் வேறொன்றும் நிகழாது. அப்படியே, வாங்கி ரொம்ப நாளாக வாசிக்காமல் வைத்திருக்கும் புத்தகத்தையும் வாசித்துவிட வேண்டும். அடித்தளம் சரியாக இருந்தால்தான் எதன் ஒன்றின் மீதும் நிற்க முடியும். ஆகையால் ஒரு குழந்தை போல அனைத்தும் மீள் வாசிப்பு செய்யலாமென்று இருக்கிறேன். ஆம் இதுவரை நான் கற்றுது மிக மிக அதிகம். எல்லாவற்றையும் செய்ய முடியாதெனினும் முடிந்த அளவுக்கு செய்யலாம். இன்ற...

சொனாட்டா - ஆண்களுக்காக ஒரு புத்தகம்

பாலுவின் சொனாட்டாவை வாசித்து முடித்தேன். இன்று நவீனத்துவம் பூதாகரித்திருக்கும் சூழலில் அது அதன் உபவிளைவுகளுடனே வருகிறது. உலகெங்கும் ஆண்மையின் அல்லாட்டங்களை இன்று  பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் சந்திக்கும் உளவியல் சார்ந்த, அடையாளம் சார்ந்த அலைக்கழிவை, அவனின் தன்னிரக்கத்தை, அவனின் சோர்வை, அவன் வீழ்த்தப்பட்டுக்கொண்டிருப்பதை, விழுந்தவுடனும் வீழ்த்தப்பட்டவுடனும் அவன் தன்னுள்ளே பொதிந்து சுருங்கி மனக்குமுறலை பொருவாய்கொண்டு கொப்பளிப்பதை, சிலர் தள்ளி நின்று நகைத்தும், சிலர் அவன் மேல் கற்களை வீசியும், சிலர் அவனை ஆதாயப்படுத்திக்கொண்டும், சிலர் புரிந்துக்கொண்டும் கருணைக் கூர்ந்தும் கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு வரலாறு முழுவதும் ஒரு பருவத்தில் அவர்களுக்கென ஒரு அலைக்கழிவுச் சூழல் உண்டு. தத்தளிப்பு உண்டு. அதனால் அவன் வழித்தவரலாம் தறிக்கெட்டுப்போகலாம். சமூகத்துக்கு உதிரியாகி நிலச்சுமையாகலாம். தன்னையும் தனக்கானதையும் முன்நின்று பொறுப்பேற்று எடுத்துக்கொண்டு நடத்ததெரியாத மந்தமாகலாம். காமம், போதை, சூதாட்டம் மற்றும் கழிவிறக்க வன்முறை போன்ற பல களியாட்டங்களில் மனம் செலுத்தி ஆன்ம கழிவுச...

இனிய சந்திப்பு

பொதுவாக எனக்கு கைப்பேசி தட்டச்சில் நிறைய எழுத்துப் பிழைகள் வரும். மீ்ண்டும் படித்துப்பார்த்தாலும் பிழைகள் கண்களுக்கு படாது. பிழைகளுடனே ஜெயமோகனுக்கு கடிதம் எழுதியிருந்தேன். மீண்டும் சரி செய்தும் அனுப்பினேன். அவர் கண்ணில் பிழையானது பட்டுவிட்டது. பரவாயில்லை. கடிதத்தின் மறுமொழிக்காக காத்திருந்த எனக்கு அதிர்ச்சி. எப்போதும் ஐயாவின் பதிவுகள் பன்னிரண்டு மணி முடிந்தவுடன் டான் என்று வந்துவிடும். தினமும் படித்துவிடுவேன். இன்று 10/03/2024 என் கடிதத்திற்கான மறுமொழி வந்தது. திருவண்ணாமலை புத்தகத் திருவிழாவில் பவா மற்றும் எஸ்.கே.பி கருணா அவர்களின் உரையை கேட்டு முடித்துவிட்டு அண்ணாசாலையில் நடைபெற்ற கலை இலக்கிய இரவு நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு தேநீர் அருந்த பேருந்து நிலையத்திற்கு சென்றோம். தேநீரை ஒரு கையில் பிடித்துக்கொண்டு தரையிலிருந்து ஒரு கையளவே மேலேறியிருந்த திட்டில் அமர்ந்து ஜெ தளத்திலிருந்து வந்த மணிச் சத்தத்தை கேட்டு உள்ளே சென்ற எனக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி இது. அது அவரின் மறுக்கடிதம். தொடர்ந்து அவருடன் உரையாட நினைப்பதால் என்னை அறிமுகப்படுத்திக்கொண்ட கடிதம். ஆச்சரியம் என்னவென்றால் இன்றுதான் ...